Advertisement

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: Monisha Fri, 18 Sept 2020 4:33:30 PM

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கோவை, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ., கோவை சின்னக்கல்லாரில் 4 செ.மீ. மழை பதிவானது.

tamil nadu,rain,weather,fishermen,strong winds ,தமிழ்நாடு,மழை,வானிலை,மீனவர்கள்,பலத்த காற்று

மீனவர்களுக்கான வானிலை அறிவிப்பு... வட கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 20ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|