Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Mon, 16 Oct 2023 10:19:43 AM

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ,கரூர், திருச்சி, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், திருவண்ணாமலை,

மேலும் திருவள்ளூர் ,காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|