Advertisement

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Fri, 31 July 2020 4:39:53 PM

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

tamil nadu,rain,weather,chennai,cloudy ,தமிழ்நாடு,மழை,வானிலை,சென்னை,மேக மூட்டம்

சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மழைபெய்த இடங்களின் விபரம் வருமாறு:-
காவேரிப்பாக்கம் - 10 செ.மீ.
ஏற்காடு - 10 செ.மீ.
போளூர் - -3 செ.மீ.
ஊத்தங்கரை -3 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|