Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Fri, 20 Oct 2023 2:49:52 PM

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


சென்னை: இன்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ...தமிழகத்தில் நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,

நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது.

rain,arabian sea , மழை,அரபிக்கடல்

எனவே அதன் காரணாமாக இன்று முதல் அக். 26 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் அக். 24 வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
|