Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Thu, 16 July 2020 3:33:35 PM

தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவை அடுத்த 24 மணி நேரத்தில் நிலவும் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|