Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு பெய்ய வாய்ப்பு

By: vaithegi Fri, 05 May 2023 10:34:47 AM

தமிழகத்தில் இன்னும் 4 நாட்களுக்கு மழைக்கு பெய்ய வாய்ப்பு

சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும்.

எனவே இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

rain,bay of bengal ,மழை,வங்கக்கடல்

இந்த நிலையில் இன்று முதல் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று வருகிற 8-ம் தேதியும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வருகிற 8ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags :
|