Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sat, 10 Dec 2022 5:10:13 PM

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


சென்னை: அடுத்த 4 நாட்கள் மழை ... தமிழகத்தில் உருவாகி இருக்கும் ‘மாண்டஸ்‌’ புயல்‌ நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்துற்கு அருகே கரையை கடந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர்‌,திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருவள்ளூர், காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி, சேலம்‌, ஈரோடு மற்றும்‌ நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rainy,chennai , மழை,சென்னை

அதை தொடர்ந்து நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 12.12.2022 மற்றும்‌ 13.12.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் 14.12.2022 தேதியில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும், சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌ எனவும், நகரில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|