- வீடு›
- செய்திகள்›
- இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
இன்று முதல் 16-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Mon, 15 May 2023 1:20:42 PM
சென்னை: மியான்மரில் மையம் கொண்டிருந்த தீவிர புயலான மோக்கா, புயலாக வலுவிழந்தது. அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதையடுத்து அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இதனால் வங்காளதேச-மியான்மர் எல்லையிஅப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இதனால் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டன.ல் உள்ள கடலோர பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டன.
இன்று முதல் 16-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17,18 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது