தமிழகத்தில் இன்று மற்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு
By: vaithegi Tue, 25 Oct 2022 2:45:22 PM
சென்னை: இன்று மற்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு .... வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து, புயலாக மாறியதால் தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், சிட்ரங் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் மழை அளவு குறைந்துள்ளது.
இதனால் தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை போன்ற மாவட்டங்களிலும்
இதையடுத்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இதை தவிர அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் குறைவான அளவு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மிதமான அளவில் மட்டுமே இருக்கும் எனவும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.