Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Thu, 26 Oct 2023 09:16:03 AM

அடுத்த 3 மணி நேரத்திற்கு  இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வருகிற 29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,

rainy,tamil nadu,puducherry and karaikal ,மழை , தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

மேலும் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|