Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

இந்த மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 23 Nov 2022 12:15:37 PM

இந்த மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு


சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு ..... வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று (22.11.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவி வந்தது. அதன் பின் வட தமிழகம் நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வந்த நிலையில், நேற்றிரவு குறிந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இதனை அடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்றும் மற்றும் நாளை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

rainy,north-east,puduvai ,மழை, வடதமிழகம், புதுவை

எனவே அதன்படியே சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மேலும் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags :
|