Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Fri, 16 Oct 2020 4:26:29 PM

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நிலவும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சின்னகல்லார், பாபநாசம், வால்பாறையில் தலா 3 செ.மீ., தென்காசி, சோலையாரில் தலா 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|