Advertisement

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

By: Monisha Thu, 19 Nov 2020 2:45:51 PM

9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வும் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

weather,thunder,rain,arabian sea,low pressure ,வானிலை,இடி,மழை,அரபிக்கடல்,காற்றழுத்த தாழ்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.

அடுத்த இரு தினங்களில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வடதமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :
|