Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான்-3’ வரும் ஜூன் 12-ம் தேதி விண்ணில் ஏவத் திட்டம்

நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான்-3’ வரும் ஜூன் 12-ம் தேதி விண்ணில் ஏவத் திட்டம்

By: Nagaraj Mon, 22 May 2023 6:02:51 PM

நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான்-3’ வரும் ஜூன் 12-ம் தேதி விண்ணில் ஏவத் திட்டம்

புதுடில்லி: வரும் 12ம் தேதி சந்திராயன் 3 செல்கிறது... நிலவை ஆய்வு செய்யும் ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ‘ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட்’ மூலம் ஜூன் 12-ம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக, 2008-ம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றிவந்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.

‘சந்திராயன்-1’ வெற்றி பெற்றதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன நுட்பத்தில் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது. அந்த விண்கலம் ‘ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட்’ மூலம் 22.6.2019-இல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு ‘சந்திரயான்-2’ அந்த ஆண்டு செப்டம்பரில் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் செயலிழந்தது.

chandrayaan,spacecraft,explorations,scientists ,சந்திராயன், விண்கலம், ஆய்வுப்பணிகள், விஞ்ஞானிகள்

அதேநேரத்தில், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ‘ஆா்பிட்டா்’ நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. தற்போது அந்த ‘ஆா்பிட்டா்’ நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில், ‘சந்திரயான்-3’ திட்டத்தை சுமாா் ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ஆம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ‘ஆா்பிட்டா்’ நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டா் மற்றும் ரோவா் கலன்களை மட்டும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான ஆய்வுப் பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பிறகு ‘சந்திரயான்-3’ விண்கலம் ஜூன் 12-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Tags :