Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வரின் நிகழ்ச்சிகளில் மாற்றம்

புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வரின் நிகழ்ச்சிகளில் மாற்றம்

By: Nagaraj Mon, 23 Nov 2020 9:37:45 PM

புயல் எச்சரிக்கை காரணமாக முதல்வரின் நிகழ்ச்சிகளில் மாற்றம்

முதல்வரின் நிகழ்ச்சிகளில் மாற்றம்... புயல், மழை எச்சரிக்கை உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தன் அடிப்படையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் 25.11.2020 அன்று முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

review meeting,agenda,change,cm ,ஆய்வு கூட்டம், நிகழ்ச்சி நிரல், மாற்றம், முதல்வர்

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் ஏற்படும் வானிலை மாற்றத்தின் காரணமாக புயல், மழை எச்சரிக்கை உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தன் அடிப்படையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி அன்று முற்பகல் பெரம்பலூர் மாவட்டத்திலும், பிற்பகல் அரியலூர் மாவட்டத்திலும் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|