Advertisement

பராமரிப்பு பணி...எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

By: vaithegi Mon, 01 Aug 2022 06:41:10 AM

பராமரிப்பு பணி...எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்

சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் விஜயவாடா-சென்னை சென்டிரல்(வண்டி எண்:12711) இடையே காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை(செவ்வாய்கிழமை) கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரல்-விஜயவாடா(12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கூடுரில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

express train service,switching,maintenance work ,எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை,மாற்றம் ,பராமரிப்பு பணி

நெல்லூர்-சூலூர்பேட்டை(06746) இடையே காலை 10.15 மணிக்கும் மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-நெல்லூர்(06745) இடையே காலை 7.45 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டை-சென்டிரல்(06742) இடையே மதியம் 12.35 மணிக்கும் மறுமார்க்கமாக சென்டிரல்-சூலூர்பேட்டை(06741) இடையே அதிகாலை 5.20 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஆவடி-சென்டிரல்(66000) இடையே அதிகாலை 4.25 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Tags :