Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

By: vaithegi Fri, 28 July 2023 10:36:57 AM

பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்ட ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பெரும்பாலும் வெளியூர் செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய விரும்பும் நிலையில் தற்போது ரயில் பாதையில் சில மாற்றங்களை செய்து உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதாவது, திருச்சியில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தென் மாவட்ட ரயில்கள் வருகிற ஜூலை 30-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 1 -ம் தேதி வரை மாற்றுப் பாதையில் இயங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

maintenance work,southern railway administration ,பராமரிப்பு பணி,தெற்கு ரயில்வே நிர்வாகம்

மேலும் இது மட்டுமில்லாமல், பராமரிப்பு பணி காரணமாக திருச்சி ரயில்வே பாதை வழியாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

எனவே, தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் பயணிகள் 3 தினங்களும் ரயில்களின் வழித்தடத்தை நன்கு அறிந்து அதற்குத் தகுந்தவாறு பயணத்தை மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

Tags :