Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் பள்ளி நேரத்தில் மாற்றம்

பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் பள்ளி நேரத்தில் மாற்றம்

By: vaithegi Wed, 08 Mar 2023 3:39:06 PM

பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் பள்ளி நேரத்தில் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல் நேரடியாக பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. எனவே இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 9ம் தேதி வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதையடுத்து பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

school,public examination ,பள்ளி ,பொதுத்தேர்வு

இதனால் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் போது மற்ற மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

எனவே அதன்படி 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டும் தேர்வு நடைபெறும் சமயத்தில் எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1:30 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
|