Advertisement

நாளை இயக்கப்படும் சில ரயில்களில் மாற்றம்

By: vaithegi Mon, 17 Oct 2022 6:09:58 PM

நாளை இயக்கப்படும் சில ரயில்களில் மாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்புகளை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இதையடுத்தது இந்த நிலையில் தெற்கு ரயில்வே நாளை இயக்கப்படும் ரயில்களில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

அந்த வகையில் நாளை ரயில்களில் பராமரிப்பு பணிகளின் காரணமாக தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும். மேலும் அந்தியோதயா விரைவு ரயில் திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழியாக நாகர்கோவில் – தாம்பரம் இடையேயான ரயில் மதியம் 3.50 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.

train,chennai , ரயில்,சென்னை

அதை தொடர்ந்து செங்கோட்டை – மதுரை இடையேயான ரயில் காலை 7 மணிக்கு புறப்படும். விரைவு ரயிலானது நாளை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10க்கு மீண்டும் இயக்கப்படும்.

மேலும் நாகர்கோவில் – கோவை இடையிலான ரயில் காலை 7.35 மணிக்கு புறப்படும். விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும். மாற்று வழியில் கோவை – நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|