Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

By: Monisha Tue, 19 May 2020 1:34:19 PM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பை குறைப்பதற்காக இந்தியா முழுவது மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

10th class general exam,minister sengottaiyan,tamil nadu,corona impact,june 15th ,10-ம் வகுப்பு பொதுத்தேர்வு,அமைச்சர் செங்கோட்டையன்,தமிழ்நாடு,கொரோனா பாதிப்பு,ஜூன் 15-ந்தேதி

கொரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும் 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16-ந்தேதி நடைபெறும். 12-ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தேர்வு அட்டவணை விபரம்:-
ஜூன் 15-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 17-ந்தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ந்தேதி : கணிதம்
ஜூன் 20-ந்தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ந்தேதி : அறிவியல்
ஜூன் 24-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ந்தேதி : தொழிற்பாடம்

Tags :