Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்

நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்

By: vaithegi Wed, 10 Aug 2022 12:55:23 PM

நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன.டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் (ஆகஸ்ட்) 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுருந்தது.

இதனை அடுத்து இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

teacher eligibility test date change ,ஆசிரியர் தகுதித் தேர்வு,தேதி மாற்றம்

இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் 10 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த அறிவிப்பு, தேர்வுக்கால அட்டவணை, அனுமதிச்சீட்டு விபரம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வித்துள்ளது.

Tags :