Advertisement

வசீகர அழகைத்தரும் குங்குமப்பூ!

By: Monisha Mon, 25 May 2020 1:12:19 PM

வசீகர அழகைத்தரும் குங்குமப்பூ!

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வந்தால் நகங்களும் இயல்பான நிறம் பெறும்.

முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான். அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் இந்தக் கலவையைப் பயன்படுத்தினால் புருவம் அடர்த்தியாகவும் அழகாகவும் மாறும்.

beauty tips,saffron,blackhead,thick eye brows,lips ,அழகு குறிப்புகள்,குங்குமப்பூ,கரும்புள்ளி,அடர்த்தியான புருவம்,உதடுகள்

குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்தசெல்கள் நீங்கி, முகம் பொலிவடையும்.

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமையை நீக்க குங்குமப் பூவை பயன்படுத்தி வந்தால் நிறம் மாறி உதடுகள் அழகாகும்.

Tags :