Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழுவிற்கு உற்சாக வரவேற்பு

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழுவிற்கு உற்சாக வரவேற்பு

By: Nagaraj Wed, 06 Sept 2023 07:21:22 AM

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழுவிற்கு உற்சாக வரவேற்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: பூமிக்கு திரும்பினர்... அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசாவுடன் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டு சேர்ந்துள்ளது. இக்குழுவினர் 6 மாதங்கள் விண்வெளியில் தங்குவார்கள். கடந்த மாதம், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து க்ரூ-7 உடன் ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டது.

earth,spacex,team,victory ,குழு, பூமி, வெற்றிகரம், ஸ்பேஸ் எக்ஸ்

இதில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் பயணித்தனர்.

இந்நிலையில் குழு-7க்கு முன்னதாக அனுப்பப்பட்ட குழு-6 இன் பணிக்காலம் முடிவடைந்ததால் அவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதன்மூலம் கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட குழு-6, அதாவது விண்வெளி வீரர்களான ஸ்டீபன் போவன், ஆண்ட்ரி பெட்யாவ், சுல்தான் அல் நெயாடி மற்றும் வாரன் ஹோபர்க் ஆகியோர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags :
|
|
|