கோயம்பேட்டில் ரசாயனம் கலந்த மாம்பழம் பறிமுதல்
By: vaithegi Wed, 26 Apr 2023 12:24:51 PM
சென்னை: 7 டன் மாம்பழம் பறிமுதல் ..... சென்னையில் சில இடங்களில் பழங்களை ரசாயனங்களின் மூலம் பழுக்கவைத்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் பல எழுந்த வகையில் உள்ளன.
இதையடுத்து இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் அவர்கள் தலைமையிலான 5 பேர் அடங்கிய குழு நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
அப்போது 17-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திபான் போன்ற ரசாயனங்களைக் கலந்து மாம்பழங்களைப் பழுக்கவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்னர் ரசாயனம் கலந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 7 டன் மாம்பழங்களை அதிகாரிகள் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.