Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மக்களுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்  

சென்னை மக்களுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்  

By: vaithegi Thu, 12 Jan 2023 2:51:11 PM

சென்னை மக்களுக்கு சென்னை விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்  

சென்னை : போகி பண்டிகையின் போது அதிக புகை வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் ..... சென்னை விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :- சென்னை 2018-ம் ஆண்டு போகிப் பண்டிகையின் போது விமான நிலைய சுற்றுப்பகுதிகளில் பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் அதிகமாக புகை மூட்டம் ஏற்பட்டு அதிகாலை 3 மணி முதல் 9 மணி வரை 73 புறப்பாடு விமானங்களும், 45 வருகைக்கான விமானங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

ஆனால் அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக விமான நிலையத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் விமான போக்குவரத்து பாதிப்பு ஓரளவு குறைந்தது. விமான பயணிகள் எவ்வித சிரமங்கள் இன்றி தங்கள் விமானங்கள் புறப்பாடு மற்றும் விமான வருகை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையிலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

chennai airport,vendigol , சென்னை விமான நிலையம்,வேண்டுகோள்  

எனவே சென்னை விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு ஏற்படும் வகையில் பொருட்களை எரிக்க வேண்டாம். இதையடுத்து தற்போது பனி மூட்டமான வானிலை இருப்பதால் போகி பண்டிகையின் போது தீ வைத்து கொளுத்துவதால் இன்னும் அதிக புகை ஏற்பட்டு விமான போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

எனவே அதிக புகை வரும் பொருட்களை தீ வைத்து எரிக்காமல் தவிர்ப்பது விமான போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருக்கும். எனவே அதிக அளவில் புகை வரும் பொருட்களை கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :