- வீடு›
- செய்திகள்›
- கொரொனா விவரங்களை தனியார் மருத்துவமனை தராவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு
கொரொனா விவரங்களை தனியார் மருத்துவமனை தராவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு
By: Monisha Sun, 19 June 2022 2:48:32 PM
சென்னை : தமிழகத்தில் கொரொனோ நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது நேற்று மட்டும் புதிதாக 596 பேருக்கு கொரொனோ உறுதி செய்யபட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர் , செங்கல்பட்டில் 122 பேர் , கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் கொரொனோ உறுதி செய்யப்பட்டது.
மேலும் குழந்தை உள்பட தொற்று வேகமாக பரவுகிறது. ஆதலால், சென்னை மாநகராட்சி தனியார் மருத்துவமனைக்கு கொரொனோ தினசரி விவரங்களை கொடுக்கவேண்டும் என்று உத்தரவுவிட்டு உள்ளது.
மேலும் கொரொனோ உள்ளவர்கள் சிகிச்சை அளித்தாலோ மற்றும் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தினலோ தகவல் அளிக்க வேண்டும்என்று சென்னை மாநகராட்சி உத்தரவுவிட்டு உள்ளது. இதை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.