சென்னைக்கு விலக்கு இல்லவே இல்லை... 4ம் கட்ட ஊரடங்கு பற்றி உள்துறை தகவல்
By: Nagaraj Sun, 17 May 2020 10:28:47 AM
சென்னைக்கு விலக்கு இல்லை... நான்காம் கட்ட ஊரடங்கில், தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய 5 நகரங்களுக்கு விலக்கு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, முடிவடைகிறது. இந்நிலையில், சமீபத்தில் மக்கள் முன் வீடியோ கான்பரன்சிங் வழியாக உரையாடிய பிரதமர் மோடி, தளர்வுகளுடன் 4ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்தார். இதுகுறித்து விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னையில் தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஊழியர்கள் சொந்த செலவில் பயணிக்கும் வகையில் மாநகர பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.