Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியீடு

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியீடு

By: vaithegi Tue, 15 Nov 2022 1:29:27 PM

அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடந்த 29ம் தேதி முதல் வடகிழக்கு பருமழை தொடங்கியதை தொடர்ந்து பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது.

chennai meteorological center,heavy rain ,சென்னை வானிலை மையம்,கனமழை

இதையடுத்து தெற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வங்கக்கடல் பகுதியில் வருகிற 16, 17,18ம் ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :