- வீடு›
- செய்திகள்›
- கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் ,விற்பனை செய்பவர்களுக்கு சென்னை பெருநகர காவல் துறையினர் எச்சரிக்கை
கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் ,விற்பனை செய்பவர்களுக்கு சென்னை பெருநகர காவல் துறையினர் எச்சரிக்கை
By: vaithegi Fri, 26 Aug 2022 8:30:40 PM
சென்னை: தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்துபவர்களின் எண்ணிக்கையும் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது.
இதை அடுத்து இதில் முதற்கட்ட நடவடிக்கையாக சென்னை பெருநகரில் கஞ்சா, போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது, சென்னை பெருநகர காவல் துறையினர் கஞ்சா, போதை பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக கடத்தும் நபர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து இதற்கென தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா, போதை பொருட்களை கடத்துபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.