இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை கடந்தது சென்னை அணி
By: Nagaraj Sat, 19 Sept 2020 10:50:15 PM
இன்றைய ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் இடையே பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சென்னை அணி களம் இறங்கி இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை எப்போதுமே தனது வலிமையை நிரூபித்து வந்திருக்கிறது. அதை இன்றும் தொடர்வதே அந்த அணியின் இலக்காக இருந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் கோப்பையை பறிகொடுத்த சி.எஸ்.கே அதற்கு பழி தீர்ப்பதை இலக்காக வைத்திருக்கிறது.
இவ்விரு அணிகளுமே வலுவான அணிகள் என்பதில் சந்தேகம் இல்லை. மும்பை
இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை
வென்றிருக்கிறது. சி.எஸ்.கே 2011, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பை
வென்றது. மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், பும்ரா,
ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கை கொடுப்பார்கள். சி.எஸ்.கே அணிக்கு கேப்டன்
டோனி, வாட்சன், பிராவோ, டுபிளிசிஸ் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இன்றைய
ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது மும்பை அணி.
இதையடுத்து 163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 2
விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் ராயுடு, டு பிளிசிஸ் ஆகியோர் அதிரடியாக
விளையாட 100 ரன்களை கடந்துள்ளது சென்னை அணி.