Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்

By: vaithegi Thu, 30 June 2022 2:56:18 PM

தமிழகத்தில் மழை இன்னும் 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம்: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.

meteorological centre,chennai ,சென்னை, வானிலை ஆய்வு மையம்

இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலையில் கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :