Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேத்தன் சௌகான் மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேத்தன் சௌகான் மரணம்

By: Nagaraj Sun, 16 Aug 2020 7:29:57 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சேத்தன் சௌகான் மரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் மூத்த வீரர் சேத்தன் சௌகான் (73) இன்று மரணமடைந்தார்.

கடந்த ஜூலை 12 ஆம் தேதி சேத்தன் சௌகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு பிரச்னை ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிவில் இருந்த சேத்தன் சௌகான் இன்று ஞாயிற்றுக்கிழமை இன்று மரணமடைந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரராகவும் அணியின் அணி மேலாளராகவும் பணியாற்றியவர் சேத்தன் சௌஹான். உத்தரப் பிரதேச அரசின் கீழ் அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த வீரரான இவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags :
|