சில மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ள ரஜினி
By: Nagaraj Thu, 24 Dec 2020 9:06:27 PM
எட்டு மாவட்ட நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ளார் ரஜினி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிஸ்டம் சரில்லை கெட்டுப்போய்கிடைக்கு என்று சொல்லித்தான் கட்சி தொடங்குகிறோம். நாமளே சரியில்லாம இருந்தா எப்படி? ஊழலுக்கு எதிராகத்தான் போராடுவேன்னு சொல்லிட்டு வர்றேன். ஆனா, நீங்க காசு பார்க்குறதுலயே குறியா இருக்குறீங்க? உங்களை நீங்க சரி செய்யாதவரைக்கும் நான் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்றுதான் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வெடித்திருக்கிறார் ரஜினி.
அந்த கூட்டத்திற்கு பின்னராவது அவர்கள் தங்களை சரி செய்துவிடுவார்கள் என்றுதான் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரஜினி. ஆனால், அத்தனை கண்டிப்பு காட்டிய பின்னரும் கூட, எட்டு மாவட்ட நிர்வாகிகள் பிரதான கட்சிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கும் செய்தி ரஜினிக்கு எட்டியதும் கண் சிவந்திருக்கிறது.
இதுவரைக்கும் இருந்ததெல்லாம் ஓகேதான். ஆனா, தனியா கட்சி தொடங்குற வேலைகளை
பார்க்கும்போதும் அவுங்க கூடவே தான் இருப்பேன்னு சொன்னா, அது எப்படி
சரியாகும்? என்று ஆவேசப்பட்டிருக்கிறார். இதுல, அந்த எட்டு நிர்வாகியும்,
பிரதான கட்சிகளில் இருப்போரையே ரஜினி மன்றத்திற்கு இழுத்து வரும் வேலைகளை
செய்து வருகின்றனர்.
கட்சி தொடங்குறதுக்கு முன்னாடியே எச்சரித்தும்,
திரும்பவும் அதையே செய்வேன்னா சொன்னா.. இவுங்களை வச்சு என்னத்த கணக்கு
போடுறது? அதனால, அந்த எட்டு பேரையும் முதல்ல நீக்கிவிட்டு, இனியாவது
உருப்படியான நிர்வாகிகளை அந்த இடத்துக்கு போடுங்க என்று தலைமை நிர்வாகிக்கு
உத்தரவு போட்டிருக்கிறாரம் ரஜினி.