அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், துணை முதல்வர்
By: Nagaraj Tue, 06 Oct 2020 9:06:30 PM
ஆலோசனை நடந்து வருகிறது... முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாளை அ.தி.மு.க.,வில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர்ராஜூ,தங்கமணி, வேலுமணி ,உடுமலை ராதாகிருஷ்ணன், அன்பழகன், காமராஜ், செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , வளர்மதி, தளவாய்சுந்தரம், தென் மாவட்ட பிரதிநிதிகள், சுதாபரமசிவம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதே போல் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டத்துறை அமைச்சர் அமைச்சர்
சி.வி.,சண்முகம் மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, உள்ளிட்டோருடன் ஆலோசனை
நடத்தி வருகின்றனர். நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று
அறிவிக்கப்படுவார்கள் என்று முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால்
தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது. முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் என இருவரும் தங்களின்
ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.