பழனி கோயில் மேம்பாட்டு திட்ட வரைவுக்கு முதல்வர் ஒப்புதல்
By: Nagaraj Sun, 25 Dec 2022 9:19:01 PM
பழனி: முதல்வர் ஒப்புதல்... பழனி முருகன் கோயில் மேம்பாட்டுக்கான ரூ.200 கோடி திட்ட வரைவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவதாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலில் பல்வேறு சீரமைப்பு பணிகள் பெரும் பொருட்செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனி முருகன் கோவிலில்
88 திருப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் 26 திருப்பணிகள் கோயில்
நிதியிலும், 62 பணிகள் நன்கொடையாளர்கள் மூலமும் நடப்பதாக தெரிவித்தார்.
இப்பணிகள்
நிறைவடைந்து பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஜனவரி 27ம் தேதி கோவில்
முழுக்கு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு
குறிப்பிட்டார். மேலும் பழனி முருகன் கோயில் மேம்பாட்டுக்கான ரூ.200 கோடி
திட்ட வரைவு திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்
அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.