நாட்டு நலனுக்கான பிரார்த்தனை செய்வதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
By: Nagaraj Tue, 07 Mar 2023 7:53:29 PM
புதுடெல்லி: பிரார்த்தனை செய்வேன்... ஹோலி பண்டிகையின் போது நாட்டு நலனுக்காக பிரார்த்தனை செய்வேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மார்ச் 7) வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் நிலவும் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மோசமான நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் இருவரும் அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த முயன்றனர். நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்குத் துணைபோவதும், மக்களுக்கு நல்ல கல்வி, சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்களைச் சிறையில் அடைப்பதும் மிகவும் கவலைக்குரியது.
எனவே நாளை நாட்டு நலனுக்காக நான் உடனடியாக பிரார்த்தனை செய்ய உள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தவறு செய்கிறார் என்று நீங்களும் நினைத்தால், நாட்டின் நலனில் அக்கறை உள்ளவராக இருந்தால், நாளை ஹோலி பண்டிகைக்கு பிறகு சிறிது நேரம் ஒதுக்கி, நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
சாமானியர்களுக்காக வேலை செய்யவோ, அவர்களின் குறைகளைக் கேட்கவோ இங்கு யாரும் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் கல்வியை ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்கிறார் மணிஷ் சிசோடியா.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளின் நிலை அனைவருக்கும் தெரியும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், யாரோ ஒருவர் சுகாதார நிலையை மாற்றி, நாட்டுக்கு நல்ல சுகாதார மாதிரியைக் கொடுத்தார். அந்த நபர் சத்யேந்திர ஜெயின். ஆனால் அவர்கள் இருவரும் பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.