Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று மதியம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இன்று மதியம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

By: Nagaraj Tue, 09 June 2020 12:46:13 PM

இன்று மதியம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

இன்று மதியம் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிய வந்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., இன்று (ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார். வரும், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை, அரசு செய்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், தேர்வு நடத்தக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

counsel,chief minister,ministers,officers,elect ,ஆலோசனை, முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், தேர்வு

இதற்கிடையில் இன்று மதியம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் இரு துறை உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு வழக்கு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் நேற்று அம்மாநில முதல்வர் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவித்தார்.

இதை போலவே தமிழகத்திலும் அறிவிக்கலாமா அல்லது மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 15ம் தேதி தேர்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்குமா என்ற சந்தேகம் உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

Tags :