Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

By: Nagaraj Sat, 15 Apr 2023 6:20:51 PM

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தொகுதி பார்வையாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: முதலமைச்சர் ஆலோசனை... நாடாளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.,வை பலப்படுத்தும் வகையில், அக்கட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த மார்ச் மாதம் திமுக பார்வையாளர்களை நியமித்தது. மேலும், திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

counseling,elections,m k stalin,parliament,strategy, ,ஆலோசனை, தேர்தல், நாடாளுமன்றம், மு.க.ஸ்டாலின், வியூகம்

இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கான பார்வையாளர்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சியை பலப்படுத்தும் நோக்கில் திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை அனைவரிடத்திலும் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் தான் மாபெரும் வெற்றியை வசப்படுத்த முடியும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

Tags :