Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

By: Nagaraj Mon, 15 June 2020 07:44:50 AM

மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் இன்று ஆலோசனை... கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று விபரமறிந்த வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது.

chief minister,medical specialists,committee,consulting ,
முதலமைச்சர், மருத்துவ நிபுணர்கள், குழு, ஆலோசனை

தமிழகத்தில் தொடர்ந்து 14 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். வரும் 17-ம் தேதி பிரதமருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Tags :