Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆசிர்வா யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

ஆசிர்வா யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

By: Nagaraj Tue, 07 Mar 2023 5:36:43 PM

ஆசிர்வா யாத்திரையில் பங்கேற்ற முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: முதல்வர் பங்கேற்பு... மும்பையில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் சாா்பில் தொடங்கிய ஆசிர்வா யாத்திரையில் முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்துகொண்டார். மராட்டியத் மாநிலத்தில் கஸ்பா பேத், சிஞ்வாட் தொகுதி இடைத்தேர்தல் கடந்த மாதம் நடந்தது.

தேர்தலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு கஸ்பா பேத் தொகுதியை பா.ஜனதா காங்கிரசிடம் பறி கொடுத்தது. இந்தநிலையில் மக்களை சந்திக்க மும்பையில் பா.ஜனதா – சிவசேனா (ஷிண்டே தரப்பு) கட்சிகள் இணைந்து ‘ஆசிர்வாத் யாத்திரையை’ தொடங்கி உள்ளது. யாத்திரையின் போது மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதி மக்களை பா.ஜனதா, சிவசேனாவினர் சந்திக்கின்றனர்.

28 years,behalf,constituency,rally, ,ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா, மும்பை, யாத்திரை

நேற்று முதல் நாள் முல்லுண்டு உள்ளிட்ட பகுதிகளில் மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் தலைமையில் கட்சியினர் பேரணியாக சென்று மக்களை சந்தித்தனர்.

இந்த யாத்திரையில் முதல்-அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார். யாத்திரை தொடர்பாக ஆஷிஸ் செலார் கூறுகையில், “முதல் நாளில் 2 நாடாளுமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தோம்.

வருகிற 9-ந்தேதி 2 தொகுதிகளிலும், 11-ந்தேதி 2 தொகுதிகளிலும் யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். யாத்திரையின் முக்கிய தலைவர்கள் கோவில்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வார்கள். மக்களை சந்திப்பார்கள்” என்றார்.

Tags :
|
|