Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு

By: Nagaraj Fri, 09 June 2023 7:44:57 PM

தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஆய்வு

தஞ்சாவூர்: முதல்வர் நேரில் ஆய்வு... மேட்டூர் அணை வரும் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும் விண்ணமங்கலத்தில் உள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

chief minister,officials,instructed,moolaimuthuwari,inspection ,முதலமைச்சர், அதிகாரிகள், அறிவுறுத்தினார், முதலைமுத்துவாரி, ஆய்வு

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள கூழையாறு வடிகால், இருதயபுரம் மற்றும் வெள்ளனூரில் நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட இடங்களில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை முதலமைச்சர் பார்த்து விவரங்களை கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். எஞ்சிய பணிகளையும் விரைவில் முடிக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

Tags :