முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்
By: vaithegi Fri, 25 Aug 2023 09:38:30 AM
சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 1978 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு பாசத்துடன் உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.