Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கள ஆய்வு முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட் டார்

கள ஆய்வு முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட் டார்

By: vaithegi Thu, 16 Feb 2023 6:30:36 PM

கள ஆய்வு முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட் டார்

சென்னை: சென்னை புறப்பட் டார் .... கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், இத்திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற 4 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று சேலத்திற்கு வந்தார். அதை தொடர்ந்து இன்று 2- வது நாளாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

chennai,chief minister ,சென்னை ,முதலமைச்சர்

இதையடுத்து சேலம் , நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற 4 மாவட்டங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காந்தி, மதிவேந்தன் போன்றோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டகளில் கள ஆய்வை மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Tags :