Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

By: vaithegi Tue, 17 Oct 2023 11:40:09 AM

இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

சென்னை, காஞ்சி, திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி முதல்வர் இன்று ஆய்வு ... ‘மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மன நிறைவுடன் திரும்பிச்செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்’ என முதல்வர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அதன் தொடர்ச்சியாக, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம்தொடங்கி வைத்த முதல்வர், பிப்.1, 2-ம் தேதிகளில் வேலூர்மண்டலத்தில் உள்ள வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

chief minister m.k.stalin,project works ,முதல்வர் மு.க.ஸ்டாலின் , திட்டப் பணிகள்


அதை தொடர்ந்து, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அரசு திட்டங்களை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், வடமாவட்டங்களில் தற்போது ஆய்வு நடத்த உள்ளார்.

எனவே இதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கள ஆய்வில் முதல்வர் திட்ட ஆய்வுக்கூட்டம் இன்றும் நாளையும், மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மாநில நிறுவனத்தில் நடைபெறுகிறது.



Tags :