- வீடு›
- செய்திகள்›
- இன்று பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
இன்று பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
By: vaithegi Thu, 15 June 2023 10:59:50 AM
சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை, கிண்டியில் அமைந்து உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைப்பதாகயிருந்தது. அதற்காக, டெல்லி சென்று திரௌபதி முர்மு அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவரது தேதி உறுதி செய்யப்படாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.