Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் மம்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது

வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் மம்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது

By: Nagaraj Wed, 29 Mar 2023 10:38:15 PM

வழக்கை ரத்து செய்யக்கோரி முதல்வர் மம்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது

கொல்கத்தா: தேசிய கீதத்தை பாதியில் நிறுத்தி அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2021ல், மும்பை, மகாராஷ்டிராவில், 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, மும்பையில், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இதில், நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி தேசிய கீதத்தை இசைக்கும் போது அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வீடியோவும் வைரலானது. இதற்கு மேற்கு வங்க பாஜக தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி தேசிய கீதம் இசைக்கப்படாமல் அதனை பாதியிலேயே நிறுத்திய செயல் அதற்கு அவமதிப்பு செய்து விட்டார் என காட்டுகிறது. தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டம் 3-ன் படி அவர் தவறு செய்து உள்ளார்.

case,complaint,contempt,mamata banerjee,national anthem,petition,waiver ,அவமதிப்பு, தள்ளுபடி, தேசிய கீதம், புகார், மனு, மம்தா பானர்ஜி, வழக்கு

எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் அல்லது பாடப்பட்டாலும் பார்வையாளர்கள் எழுந்து இருக்க வேண்டும் என்ற 2015-ம் ஆண்டின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அவர் மீறி விட்டார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் முதலில் அமர்ந்திருந்தாலும், பின்னர் எழுந்து நின்று தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்படுவதற்கு முன்பாக அதை நடுவழியில் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால், ஒரு முதல்-மந்திரியாக, வங்காளத்தின் கலாசாரம், தேசிய கீதம், நாடு மற்றும் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரை அவமதிப்பு செய்து விட்டார் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது. இதுபற்றி மும்பை பா.ஜ.க. செயலாளர் விவேகானந்த் குப்தா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி அமித் போர்கர் தலைமையிலான ஒரு நபர் அமர்வு இந்த உத்தரவை தள்ளுபடி செய்தது. இதனால் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். இதை விசாரிக்க ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமித் போர்கர் தள்ளுபடி செய்தார். செஷன்ஸ் நீதிமன்றத்தின் பரிந்துரை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இருப்பதாகக் கூறி மம்தாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags :
|