கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்
By: vaithegi Fri, 02 Sept 2022 10:57:01 PM
திருவனந்தபுரம், இந்த ஆண்டு தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை (சனிக்கிழமை) கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கின்றனர்.
இச்சூழலில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கேரள மாநிலத்திற்கு சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கோவளத்தில் சந்தித்து பேசினார்.
இதை அடுத்து அப்போது அவருக்கு திராவிட மாடல் ( The Dravidian Model) என்ற புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி பொன்னாடை அணிவித்தார். நாளை கூட்டம் அதைத்தொடர்ந்து இன்று மாலை கேரள அரசின் சார்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
அதன் பின்னர் திருவனந்தபுரத்தில் தங்கும் அவர், நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். கூட்டம் முடிந்ததும், நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.