தருமபுரம் ஆதீனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார்
By: vaithegi Thu, 24 Aug 2023 10:37:07 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செல்கிறார். தருமபுரம் ஆதீனக் கலை கல்லூரியில் கட்டப்பட்டு உ ள்ள புதிய கலையரங்கத்தை திறந்து வைக்கிறார்...
தருமபுரம் ஆதீனக்கல்லூரியில் இன்று நடைபெறும் பவள விழாவில் முதல்முறையாக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மயிலாடுதுறையில் சைவத்தையும், தமிழையும் பரப்பி வரும் தொன்மையான தருமபுரம் ஆதீன மேடம் அமைந்து உ ள்ள நிலையில் இங்கு ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
எனவே இதற்கான பவள விழா இன்று கொண்டாடப்படுகிறது. கல்லூரி வளாகத்தில் 3000 பேரும் அமரும் வகையில் பிரம்மாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இக்கலையரங்கத்தை இன்று மாலை 5 மணி அளவில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஒலிப்பதிவக, தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை திறந்து வைத்து பவள விழா மலர் மற்றும் திருக்குறள் ஆதன விளக்க உரையையும் முதல்வர் வெளியிடுகிறார்.