Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரூரில் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்

கரூரில் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்

By: vaithegi Sat, 02 July 2022 09:28:48 AM

கரூரில் இன்று அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்கவுள்ளார்

கரூர்: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டு வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை புரிந்துள்ளார்.

இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணியளவில் கரூர் பயணியர் மாளிகையில் இருந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் திருமாநிலையூர் மைதானத்திற்கு வருகை தருகிறார்.

m. k. stalin,karur ,மு.க.ஸ்டாலின் , கரூர்

அதன் பின் விழா மேடையில் 80 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். மேலும் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் உள்ளார்

இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரும் வழியில் 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் வழிநெடுகிலும் நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி அங்கு பெரும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags :