- வீடு›
- செய்திகள்›
- வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் ... வருகிற 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் ... வருகிற 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
By: vaithegi Fri, 23 Sept 2022 4:46:22 PM
சென்னை: வருகிற 26-ந்தேதி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ..... தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் 2-வது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இதையொட்டி மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதனால் ஆறு, குளம், கால்வாய்கள், தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தும் வேலைகளும் மிக தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.
இதனை அடுத்து இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தீயணைப்பு அதிகாரிகள் என பலர் பங்கேற்கிறார்கள்.
மேலும் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.